நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம்

நெய்வேலி: நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு உள்ளனர். பாஜகவினர் போராட்டத்தை அடுத்து நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: