சின்னாளபட்டி: செம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர், மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, தருமத்துப்பட்டி, உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் குறுகியகால பயிரான மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தண்ணீர் தேவை குறைவு என்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.