புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். அப்போது எதிர்கட்சியினர் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டனர். இதற்கு காந்தி எதிர்கட்சிகளுக்கு ட்ரெய்லராக இருக்கலாம்; ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கையாக இருக்கிறார் என்று தெரிவித்தார். புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்களை தனது உரையில் குடியரசு தலைவர் விவரித்ததாக தெரிவித்தார். காந்திஜியே தமது ஆட்சியின் உயிர்மூச்சு என்று தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக தமது அரசு ஓய்வின்றி உழைக்க உறுதிபூண்டுள்ளதாகவும், தமது அரசு வேகமாக செயல்பட்டால் தான் காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.