சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் நகர துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜூக்கும், கருணாகரன் - சகிலா தம்பதியரின் மகள் தமிழரசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியும் வடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மறைந்த சுப்பிரமணி- சரஸ்வதி ஆகியோரின் மகன் கமலநாதனுக்கும், மறைந்த வெங்கடேசன்- ஜெயமணி தம்பதியரின் மகள் ஜெபமணிக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த சுயமரியாதை திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.