சென்னை: ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கமாண்டோ படை வீரருக்கு சரமாரியாக அடி,உதை விழுந்தது. இச்சம்பவத்தால் சிறிதுநேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அசோக்பில்லர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் இளம்பெண்ணின் அருகில் வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். மேலும், பைக்கில் தப்பி சென்ற அந்த நபரை விடாமல் தனது ஆண் நண்பருடன் துரத்தி சென்றார். எம்எம்டிஏ காலனி அருகே உள்ள சிக்னல் வந்தபோது அவரது பைக் மீது மோதி கீழே தள்ளி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.