துரைப்பாக்கம்: திருவான்மியூரில் உள்ள பழமை வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது. முன்னதாக கடந்த ஜூன் 6ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் சன்னதிகளுக்கு திருப்பணி நடத்தப்பட்டது. தினமும் இருவேளை ஹோமம், பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மருந்தீஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.