கரூர்: கரூர் காதப்பாறை பஞ்சாயத்துக்குட்பட்ட செம்மலர் நகர்ப்பகுதியில் மண்சாலையை தார்ச்சாலையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் காதப்பாறை பஞ்சாயத்துக்குட்பட்ட அருகம்பாளையம் பகுதியில் செம்மலர் நகர் உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு குடியிருப்புக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே மண்சாலையாகவும், மேடும் பள்ளமுமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.