புழல் ஏரியில் லாரி டிரைவர் சடலம் மீட்பு

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் சோலையம்மன் நகர் 8வது தெரு சேர்ந்தவர் சரவணன் (34). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் ஆலமரம் அருகே உள்ள புழல் ஏரிக்கு வந்தார். அங்கு, பைக்கை நிறுத்திவிட்டு ஏரியில் குதித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவரது சடலம் புழல் ஏரி ஆலமரம் பகுதி அருகே கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: