வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான இறுதி வாதத்துக்கான விசாரணை நேற்று தொடங்கியது.இந்தாண்டு நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நாடாளுமன்றத்தை செயல்படுத்த விடாமல் தடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதிநிதிகள் சபையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 29ம் தேதி செனட் சபையில் தொடங்கியது.