விருதுநகர்: விருதுநகர் உட்பட 6 மருத்துவகல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மருத்துவ கல்லூரிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.4 ஏக்கர் நிலமும், அரசு தலைமை மருத்துவமனையில் 4 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.4 ஏக்கரில் மருத்துவக்கல்லூரி மெயின் பில்டிங், வகுப்பறை, மாணவ, மாணவியர் விடுதிகள், கல்லூரி பேராசிரியர்கள் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. தலைமை மருத்துவமனையில் 11.40 ஏக்கரும், மகப்பேறு மருத்துவமனையில் 3.60 ஏக்கர் நிலம் என 15 ஏக்கர் நிலம் உள்ளது.