திருச்சுழி: திருச்சுழி அருகே, பூச்சுகள் உதிர்ந்து, ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், கிராமத்தில் சுத்தமடம் செல்லும் சாலையில், ஓரமாக உள்ள மின்கம்பங்கள் பூச்சுகள் உதிர்ந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் சென்று வருகின்றனர். மின்கம்பங்கள் இருக்கும் பகுதியில் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.