கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை தாங்கி பூக்கும் ஆர்க்கிட் மலர்கள் அழகாக பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் காலமாகும். இந்த சீசனில் மலர்கள் பூக்காது. ஆனால் இந்த சீசன் குளிரை தாங்கியும் ஆர்க்கிட் மலர்கள் மட்டும் பூக்கும். இவை தற்போது பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகின்றன.
