மதுரை: எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை எல்.ஐ.சி. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்.ஐ.சி. நிறுவனத்தினுடைய பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியானவுடன் அதிருப்தியில் இருந்த எல்.ஐ.சி. ஊழியர்கள், மதுரையில் உள்ள எல்.ஐ.சி தலைமை நிறுவனத்தின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் எல்.ஐ.சி. ஊழியர்கள் அந்த அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எல்.ஐ.சி. என்பது பொதுமக்களுக்கு வாரி வழங்கக்கூடிய அரசாங்க நலத்திட்டங்களுக்கு வரி வழங்கக்கூடிய நிறுவனமாகும். ரயில்வே திட்டம், அடிப்படை வசதிகளை மேம்ப்படுத்தக்கூடிய திட்டமாக இருந்தாலும் கடந்த ஆண்டில் பல லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி. அரசாங்க திட்டடங்களுக்கு வழங்கி இருக்கிறது.