புதுடெல்லி: ‘‘பட்ஜெட் கூட்டத் தொடரில், பொருளாதார விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதம் நடத்தப்படும்,’’ என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளாக நேற்று அவைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: வரும் பத்தாண்டுக்கான வலிமையான கட்டமைப்பை நடப்பு கூட்டத் தொடரில் எம்பிக்கள் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும். இந்த கூட்டத் தொடரில் பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.