திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் பார்வையில்லாத 6ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் கண் பார்வை இல்லாதவர்களுக்கான அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பார்வையில்லாத மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 6ம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் வகுப்பறையில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார். இதில் மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி முதல்வர் 2017ம் ஆண்டு கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஆசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.