புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் அடுத்து என்ன செய்வது என பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்த ஒரு சிந்தனையும் இல்லை,’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை கண்டுள்ளது. இந்நிலையில், பாஜ தலைமையிலான மத்திய அரசு வருகிற ஒன்றாம் தேதி 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளால் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.