அண்ணா தொழிற்சங்க பேரவையில் ஜக்கையன் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்டார்: போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு பதவி

சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவையில் ஜக்கையன் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பணிகளை கவனிப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்பட்டு, கன்வீனர் பொறுப்பில் இருக்கும் ஜக்கையன் எம்எல்ஏ, குழுவினர்களான கிருஷ்ணன், ராசு, சங்கரதாஸ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இதில் ராசு ஏற்கனவே வகித்து வரும் அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார். அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தொழிற்சங்கத்தினர்முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: