சென்னை: ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் திருத்தும் செய்ய திமுக தரப்பு வேட்பாளர் மருது கணேஷ் தரப்புக்கு அனுமதி அளித்திருக்கும் உயர்நீதிமன்றம் அதே வேளையில் அவரது கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில் திருத்தும் செய்ய திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் செலவு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற மருது கணேசனின் கோரிக்கையை நிராகரித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.