கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமெடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டம் நீக்கப்பட்டது. இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். அதன்பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கைதான 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி அவர்கள் சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றம்
- பொல்லாச்சி கற்பழிப்பு வழக்கு 1000 ஆயிரம் பேர்
- Thirunavakkarasu
- பொல்லாச்சி கற்பழிப்பு வழக்கு 1000 ஆயிரம் நபர்கள்