கூடலூர்: பேபி அணையை பலப்படுத்திய பிறகு பெரியாறு அணையில் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என, கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார். பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு முதன்மை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.