சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாமகவை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்துள்ளதாக கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சிலைகளை அவமதிப்பதும், உடைப்பதும், சங்பரிவார் அமைப்புகளின் வன்முறை பேச்சுக்களால் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இதனை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்.