நெல்லை: குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (52). இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் சில மனுக்களுடன் வந்தார். அப்போது சசிகுமாரை போலீசார் சோதனையிட்டனர். அவரது பையில் வெட்டரிவாள் இருப்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை அருகில் உள்ள காவல் அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார். ராணுவத்திற்கு ஒரு கோடி நிதி அளித்ததாகவும் கூறினார். தொடர்ந்து கலெக்டரிடம் அளிக்க வந்த மனுவை வாங்கி விசாரித்தனர்.