விழுப்புரம்: மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி. ரவிக்குமார். விறல்நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலகட்டத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி. ரவிக்குமார் பொபையில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர்.எம்.பி.ரவிக்குமார் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின் தொடக்க நிகழிச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜி.எல்.யூ.ஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த செயலியை வடிவமைத்துள்ளது.