கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை: விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை,: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவது என திருவண்ணாமலையில் நடந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் ெதாடக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், 17 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் ெசய்ய வேண்டும், . இஎஸ்ஐ முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அரசு கொள்கையின்படி மதுக்கடைகளை மூடும்பட்சத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிற அரசு துறையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: