தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனி மூடியிருந்ததால் அவ்வழியே வந்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன.