ஜெய்ப்பூர்: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கூறி, சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர்மானம் வலியுறுத்தியது. தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.