மதுரை: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து ஆணையிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.