திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவில் இலவச பொது மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர்மாவட்ம் திருத்துறைப்பூண்டியில் காவல்துறைசார்பில் 31 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டிபுதிய பேருந்து நிலையம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் மருத்துவர்கள் ராஜா, சதாசிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆட்டோ, பள்ளி வேன், பேருந்து, வேன், ஒட்டுனர்கள்.காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பயன் பெற்றனர். முகாமில் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளி வளவன், எஸ்ஜகள் சுப்பையா, ரூபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: