டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தபடுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேசமயம், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புதான் என உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 144 மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- மனுக்களை
- குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை