சென்னை: ‘ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் வேறு பள்ளியில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் தான் எழுத வேண்டும் என்ற முடிவை கல்வித்துறை கைவிட வேண்டும்’’ என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சங்க நிறுவன தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் முதல்முறையாக இந்த கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், படிக்கும் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாது.