நாகர்கோவில்: நாட்டில் மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: நாட்டில் இரண்டாவதாக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மோசமான கொள்கைகள்தான் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.