போதை மாத்திரை கடத்தி வந்த கல்லூரி மாணவர் 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை  சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று இரவு  பூக்கடை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை போலீசார் பிடித்து  விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த  பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது.

மேலும் தனியார் கல்லூரி மாணவர்கள்  நவீன், அரிகிருஷ்ணன்  என்பதும்  ஆந்திர மாநிலம் நெல்லூரில் போதை மாத்திரை வாங்கி ரயில் மூலம் சென்னை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய  போதை மாத்திரைகளை கடத்தி வந்தார்களா? அல்லது இவர்கள் பயன்படுத்த வாங்கி வந்தார்களா?  இவர்களுக்கும் போதை  கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என  பல்வேறு கோணங்களில் விசாரித்து  வருகின்றனர்.

Related Stories: