மதுரை: மதுரை, யாகப்பா நகரைச் சேர்ந்த இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கழிவை அகற்றும் பணியின் போது ஏற்படும் மனித மரணங்கள் தொடர்கிறது. இதில் அரசின் உத்தரவை அரசே மதிக்காத நிலை உள்ளது. இழப்பீடு வழங்கும் உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்திற்காக 2018-19ல் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க ரோபோ போன்ற இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பயோ செப்டிக் டேங்க் போன்றவற்றை அரசே ஊக்குவிக்க வேண்டும். தமிழக உள்ளாட்சிகளில் 35 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் உள்ளனர்.