சென்னை: உள்ளாட்சி தேர்தலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இதனை தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, ஆனால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.