சிஆர்பிஎப் இயக்குனராக ஏ.பி.மகேஸ்வரி நியமனம்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை பொது இயக்குனராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பொது இயக்குனராக பணியாற்றி வந்த ஆர்.ஆர்.பட்நாகர் கடந்த டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து காலியாக உள்ள அந்த பணியிடத்துக்கு 1984ம் ஆண்டு உத்தரப் பிரதேச பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.பி.மகேஸ்வரியை நியமித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.  ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிறந்த இவர் தற்போது உள்துறை அமைச்சகத்தில் உள்துறை பாதுகாப்பு சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். உலகின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎப்பில் 3.25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேஸ்வரி அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஓய்வு பெறும் வரை இந்த பதவியில் இருப்பார்.

Related Stories: