சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதும் சாலையோர தடுப்புச் சுவரில் நடமாடுவது வழக்கம்.