சென்னை: களியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வில்சன் மனைவி ஏஞ்சல் மேரியிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார்.