சமர்ரா: அமெரிக்க படையினர் தங்கியிருந்த ஈராக் விமானப்படை தளம் மீது ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈராக் வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி பலியானதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் இதில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை. தாக்குதலுக்கு முன்கூட்டியே அமெரிக்க வீரர்கள் அங்கிருந்து அப்புறப்பட்டிருந்தனர்.