ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, புதிய விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதற்கு கடந்த 2017ம் ஆண்டு அழைப்பு விடுத்தது. இதற்கு 18 ஆயிரம் பேர் மனு செய்திருந்தனர். இவர்களில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டு பயிற்சியை முடித்து விண்வெளி வீரர்களாக தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் விண்வெளி நடைபயிற்சி, ரோபோடிக்ஸ், சர்வதேச விண்வெளி மையத்தின் அமைப்புகள், ரஷ்ய மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜா ஜான் உர்புதூர் சாரி(41). அமெரிக்க விமானப்படையில் கர்னலாக பணியாற்றினார். தற்போது, நாசா விண்வெளி வீரராகி உள்ளார்.