தலையாட்டி பொம்மையாக இருப்பதால் தமிழக அரசுக்கு மத்திய அரசு நற்சான்று : கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு மாறியதால், நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பாஜ அரசு வழங்கியிருக்கிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது மத்திய பாஜ அரசு. இதைவிட உண்மைக்குப் புறம்பான நகைப்பிற்குரிய செயலை பாஜவைத் தவிர வேறு எந்த அரசும் செய்ய முடியாது.

மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு மாறியதால் இத்தகைய நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பாஜ அரசு வழங்கியிருக்கிறது. இந்த நற்சான்றிதழை, மத்திய அரசின் நிறுவனமான தேசிய குற்ற ஆவண காப்பகமே உண்மையை வெளிப்படுத்தி அம்பலமாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்க தவறிய அதிமுக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

Related Stories: