சென்னை: மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு மாறியதால், நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பாஜ அரசு வழங்கியிருக்கிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது மத்திய பாஜ அரசு. இதைவிட உண்மைக்குப் புறம்பான நகைப்பிற்குரிய செயலை பாஜவைத் தவிர வேறு எந்த அரசும் செய்ய முடியாது.