மேலூர்: பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீண்டும் இயக்கப்படவே கிராம மக்கள் மாலை அணிவித்து வாழை மரம் கட்டி இனிப்புகள் வழங்கி அரசு பஸ்சை வரவேற்றனர். தஞ்சாவூரில் இருந்து பொன்னமராவதி, மருதிப்பட்டி, சூரக்குடி மற்றும் முத்துச்சாமிபட்டி வழியாக மதுரை சென்ற அரசு பஸ் சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், நாடளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் நன்றி கூற முத்துச்சாமிபட்டிக்கு சமீபத்தில் வந்திருந்தார்.