பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். மேட்டூர் அணை கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதியான பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கால்வாய் கரையோரமுள்ள முன்பட்ட வயல்களில் நெல் அறுவடை, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டில் பூச்சிநோய் தாக்குதல் இல்லாததால் நெல் மணிகள் தரமாகவும், மகசூல் அதிகமாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.