சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு 528 அதிகரித்து 31,432க்கு விற்கப்பட்டது. மாலையில் அதைவிட 256 குறைந்து 31,176க்கு விற்பனையானது. ஈரான் ராணுவ படை தளபதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 3ம் தேதி அதிரடியாக ஒரு சவரன் தங்கம் 632 அதிகரித்து ₹30,520க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென சவரனுக்கு 264 குறைந்து 30,904க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் ஈரான் ராணுவம் அமெரிக்க வீரர்கள் மீது 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர் என ஈரான் தொலைக்காட்சியில் தகவல்கள் வெளியாகின. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் அபாயம் மிகுந்த உச்சக்கட்டத்துக்கு சென்றது.