சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் துணை மின் நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள் அதிகளவில் உள்ளது. எனவே, பெரிய குடியிருப்புகளுக்கு அங்கேயே துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடத்தையும் தேர்வு செய்கின்ற நிலையை உருவாக்கிட வேண்டும். மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் துணை மின் நிலையம் வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை இந்த அவையில் கோரிக்கை வைத்துள்ளேன். பள்ளிக்கரணையில் சென்னை மாநகராட்சியால் குப்ைப கொட்டுகின்ற, தரம் பிரிக்கின்ற இடம் உள்ளது. அங்கேயே இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை தேர்வு செய்து ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் துணை மின் நிலையம் வேண்டும்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை
- மடிப்பாக்கம்
- Indagaram
- Poonthavaikkavam
- தொகுதியில்
- மின் ஆலை
- Cholangananallur
- மடிகாக்கம்
- திமுக எம்.எல்.ஏ.
- Pultivakkam
- சட்டசபை