வேளச்சேரி: தரமணி 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி போலீசார் ரோந்து பணியில்இருந்தபோது ஒரு ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் சந்தேக நிலையில் நின்றிருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை வேளச்சேரி காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் நேபாள நாட்டை சேர்ந்த கேஷ்வா (28) என தெரிந்தது. மேலும் அவர் அந்த ஏடிஎம் மையத்தின் அருகே பக்கத்து கட்டிடத்தில் இயங்கும் ஓட்டலில் காவலாளியாக கேஷ்வா பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேஷ்வாவை கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.