புதுடெல்லி: தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான தேசிய கவுன்சில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், “மற்ற மதங்களை தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பது போன்று எங்களுக்கும் அரசு சார்ந்த அனைத்து சலுகைகளும் கிடைக்க1950ம் ஆண்டு சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட அந்த பத்தியை மட்டும் நீக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.