நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.... ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதலுக்கு கண்டனம்

நெல்லை: டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.

இந்த போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: