புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரத்தில் பிரதமரின் மவுனம் உரத்த குரலில் பேசுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யூ) மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கடந்த ஞாயிறன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில், 34 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மோடியின் மவுனம் உரத்த குரலில் பேசுகிறது. தனது இல்லத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக பிரதமர் குரல் கொடுக்காமல் இருப்பது அவர் உடந்தையாகவோ அல்லது தகுதியற்றவராகவோ இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.