மறைந்த முன்னாள் சபாநாயகர், எம்எல்ஏக்களுக்கு பேரவை இரங்கல்

மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் தி.கா.நல்லப்பன் (பெருந்துறை தொகுதி), சீ.க.வடிவேலு (தொட்டியம்), எஸ்.ஜெனிபர் சந்திரன் (திருச்செந்தூர்), எஸ்.ஏ.எம்.உசேன் (திருவல்லிக்கேணி), சு.சுப்பிரமணியம் (உத்திரமேரூர்), ேக.வி.முரளிதரன் (தளி), என்.ஆர்.அழகு ராஜா (தேனி), ரா.நாராயணன் (தாரமங்கலம்), கே.கே.சின்னப்பன் (ஜெயங்கொண்டம்), வ.மு.சுப்பிரமணியன் (மானாமதுரை), வை.பாலசுந்தரம் (அச்சிறுப்பாக்கம்), மு.தேவராஜன் (பெரம்பலூர்), எம்.சக்திவேல் முருகன் (அம்பாசமுத்திரம்) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரவிக்கும் வகையில் அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: