கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ப்பு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. மூங்கிலேறி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றி உஷா ராணி நேற்று பதிவியேற்றுக்கொண்டார். அப்போது தேர்தலில் தோற்ற ரம்யா மோகன் தமக்கு துணை தலைவர் பதவி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.